Auroville Foundation Act, 1988

An Act to provide for the acquisition and transfer of the undertakings of Auroville and to vest such undertakings in a foundation established for the purpose with a view to making long- term arrangements for the better management and further development of Auroville in accordance with its original charter and for matters connected therewith or incidental thereto.

Continue reading

ஆரோவில்: முன்னோக்கி செல்லும் வழியைத் திறக்கும் நேரம்

Galaxy-with-Crown-Ring

அனு மஜும்தார்

பின்னணி

இந்திய ஞானியும் தத்துவஞானியுமான ஸ்ரீ அரவிந்தரின் பரிணாமக் கண்ணோட்டத்தில் நிறுவப்பட்டது. அவருடைய ஆன்மீகக் கூட்டாளியான, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்ஃபாஸா, ஆரோவில்: பூமிக்குத் தேவையான நகரம் – ‘எல்லா நாடுகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் வசிக்கக்கூடிய, ஸ்ரீ அரவிந்தரின் அகக்காட்சியின் அடிப்படையில் முதலில் மனிதஒற்றுமையினை வெளிப்படுத்துதல் ஆகும். இந்த ஒற்றுமைக்கு உள்ளுணர்வின் தீர்க்கமான மாற்றம் தேவைப்படுகிறது.

மனித நெருக்கடி மற்றும் உலகெங்கிலும் உள்ள நகரங்களின் அவலநிலையை முன்னுணர்ந்த ஸ்ரீஅன்னை, 1965ஆம் ஆண்டில், பாரிஸைச் சேர்ந்த உயர் விருது பெற்ற பிரெஞ்சு கட்டிடக்கலைஞர் ரோஷே ஆன்ஷேவை ஆன்மீக, சமூகம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், வாழ்க்கையிலும் வாழ்க்கையின் மூலமும் உள்ளுணர்வின் வளர்ச்சி மற்றும் வெளிப்பாட்டிற்கான நிலைமைகளை உருவாக்குதல் ஆகிய காரணிகளை ஒருங்கிணைத்து ஒரு நகரத் திட்டத்தைத் தயாரிக்குமாறு நியமித்தார்.

கேலக்ஸி (பால்வெளி மண்டலம்) என அழைக்கப்படும் இந்நகரத் திட்டம், ஒரு சாசனம் ஆகியவற்றுடன் 28.02.1968 அன்று ஆரோவில் தொடங்கப்பட்டது. இது 50,000 பேரைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்து வெற்றிபெறக் கூடிய நகரமாகவும், ஸ்ரீ அரவிந்தரின் இலட்சியத்தை இலக்காகக் கொண்ட ஒரு மாதிரி நகரமாக இருக்க வேண்டும் என்பதும் நோக்கமாகும்.

1988ஆம் ஆண்டில், குடியிருப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில், ஆரோவில்லின் மோதல் காலத்தைத் தொடர்ந்து ஆரோவில் பவுண்டேஷன் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தது. நிலைத்தன்மையின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாத்ரிமந்திரின் நிறைவு, பள்ளிகள், குடியிருப்புகள், சேவைகள், செயல்பாடுள், பசுமையான சுற்றுச்சூழல் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டது.

இருப்பினும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏறக்குறைய 2500 பெரியவர்களைக் கொண்ட மக்கள்தொகையுடன், ஒரு குறிப்பிட்ட தேக்கநிலை தோன்றியதாகத் தெரிகிறது. முந்தைய நிர்வாகப் பேரவைகள் (கவர்னிங் போர்டு) நகரத்தைத் தொடங்கவும் அதன் நிலத்தைப் பாதுகாக்கவும் வலியுறுத்தின. இருப்பினும், ஒரு பிரிவினரிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு நிலவுகிறது. அதற்கு ஒரு உதாரணம் கிரவுன் சாலை ஆகும், ஆரோவில்லின் நகர்ப்புற காமன்ஸ் (பொதுவானவை), 1969 மாஸ்டர் பிளான் ஆய்வில் ஸ்ரீ அன்னையால் விரிவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. நாம் இப்போது 2022-இல்  இருக்கிறோம், அது இன்னும் தடுக்கப்பட்டு வருகிறது.

நெருக்கடி

2021-இல் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகப் பேரவை (கவர்னிங் போர்டு) ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த ஆண்டை கௌரவிக்கும் நோக்கத்துடன், கிரவுன் சாலையில் கவனம் செலுத்தி, நகரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல உறுதிபூண்டுள்ளது. அப்போதில் இருந்து, ஆரோவில் அனைத்து தவறான காரணங்களுக்காக செய்திகளில் இடம்பெற்று உள்ளது. ஏராளமான வீடியோக்கள், கட்டுரைகள், சமூக ஊடகப் பதிவுகள் காடுகளை அழிப்பதைக் கண்டித்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில், ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் அவர்கள் மற்றும் சக ஆரோவில்வாசிகளுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்தி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்து, அதன்மூலம் கிரவுன் சாலைப் பணிகளை வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளன.

ஆரோவில் பவுண்டேஷன் மற்றும் பணிக்குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும், அவர்களைப் பதவி நீக்கம் செய்வதில் உறுதியாகவும், செய்யப்பட்டு வரும் வேலைகளுக்கு எதிராகவும், ஒன்றன் பின் ஒன்றாக, நீதிமன்ற வழக்குகளை, கோஷ்டியினர் தைரியமாக தொடுத்து வருவதால், கடந்த மாதங்களில் இவை அனைத்தும் தீவிரமடைந்து வருகின்றன.

ஆரோவில்லின் ‘காடுகளை’ காப்பாற்றி, பூமியைக் காப்பாற்றுகிறோம் என்ற சாக்குப்போக்கின் கீழ், ஆரோவில்லை அழிக்க அச்சுறுத்தும் கடந்த மாத வியத்தகு நடவடிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? இது நன்கு பரிசீலிக்கப்பட வேண்டும்.

கிரவுன் எதிர்ப்பு

அதன் முகப்பில், கிரவுன் பாதைக்கான மரங்களை அகற்றும் பணி நடந்தது, அதற்காக ஜேசிபிகள் டிசம்பர் 4ஆம் தேதி பயன்படுத்தப்பட்டன. பகலில் வேலை தடுக்கப்பட்டதை அடுத்து, இரவில் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். இது ஜாலியன்வாலா பாக் மற்றும் நாஜி ஜெர்மனியுடன் வியத்தகு முறையில் இணைக்கப்பட்டுள்ளது – இரு தருணங்களிலும் எதிர்கொள்ளும் பயங்கரமான மனித அவலத்திற்கு எதிரான ஒரு கடுமையான அவமரியாதை. கிரவுன் ரிங் ஆரோவில்லின் கூட்டு நகர்ப்புற வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் நகர வட்டத்தின் நான்கு மண்டலங்களையும் ஒன்றாக இணைத்து, ஒரு பாதசாரி நகரம் மற்றும் அமைதியான, மாசுபடுத்தாத இயக்கம் ஆகியவற்றை நோக்கி நகரும் தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது. 1969ஆம் ஆண்டின் முதல் மாஸ்டர் பிளான் ஆய்வில் கிரவுன் என்பது நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி என வரையறுக்கப்பட்டது. இது முழு நகரத்திற்கும் தண்ணீர், மின்சாரம், ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மற்றும் பலவற்றிற்கான உள்கட்டமைப்பு பாதைகளையும் வழங்கும்.

ஒரே இரவில் ஐந்து இலட்சம் மரங்களை வீழ்த்திய 2011 டிசம்பர் தானே புயலுக்கு நான் கொஞ்சம் திரும்பி வருகிறேன். அதனைத் தொடர்ந்து இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒன்று: ஆரோவில்லில் பல பகுதிகளில் ஏற்பட்ட 25 நாள் மின்வெட்டைத் தடுக்க அனைத்து மேல்நிலை மின் இணைப்புகளும் கிரவுன் உள்கட்டமைப்பு பாதையில் நிலத்தடிக்கு மாற்றப்படும். நிதி திரட்டும் முயற்சிகள் நன்கொடை மற்றும் அரசாங்க நிதியுதவி பெற வழிவகுத்தது. நமது நிலம் இல்லாத இடங்களைத் தவிர, கிரவுன் வளையத்தில் உயர் அழுத்த (எச்டி) மின் கேபிள்கள் அமைக்கப்பட்டன. இரண்டு பகுதிகளில், சாலைகளில் வீடுகளும், ஒரு கழிப்பறையும் அமைக்கப்பட்டதால், மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அது அகற்றப்பட்டது, இன்னும் அதன் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்.  எச்டி கேபிளுக்கான கடைசி 400 மீட்டர் நீளம், தொடர்ந்து ‘போர்க்களமாக’ மாறியது. கிரவுனுக்கான யூத் சென்டர் பாதை பற்றியது இது. அனைத்து ஒப்பந்தங்களையும் மீறி, ஒரு பெரியவர் குழுவால் வேண்டுமென்றே ஒரு ‘தற்காலிக’ கட்டிடம் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கேபிள் செல்ல முடியவில்லை. இதனால் எச்டி வளையத்தை இயக்க முடியவில்லை, மேலும் ஆற்றலின் அடிப்படையில் ஆரோவில் நாளொன்றுக்கு ரூ.5000/- நஷ்டத்தை சந்தித்தது.

இரண்டு: புயலால் மரங்கள் சாய்ந்ததால், கிரவுனில் குறியிட்டு அடையாளப்படுத்தி, வேலையைத் தொடங்கலாம். அப்போதைய செயலாளர் அவர்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாறாக, மாஸ்டர் பிளான் திட்டத்தை மீறி, வேண்டுமென்றே மரங்கள் பாதையில் நடப்பட்டன.

2020-இல், இரண்டு ஆண்டுகளாக வெயிலில் கிடக்கும் எச்டி கேபிள்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அவை பயன்படுத்தப்படுமா, திரும்பப் பெறப்படுமா அல்லது திருப்பித் தரப்படுமா? ஆரோவில் நகவ வளர்ச்சி அவை (ஏடிடிசி) இறுதியாக சர்வேயைத் தொடங்க பணி ஆணையை வழங்கியது. இளைஞர்கள், காடுவளர்ப்போர், நண்பர்கள் ஆகியோரால் நான்கு முறை சர்வேயர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அடுத்து, ஆரோவில் பவுண்டேஷன் ஆரோவில்லின் காடுகளை அழித்ததாகக் குற்றம் சாட்டி, வெளியில் வசிக்கும் முன்னாள் ஆரோவில்வாசி ஒருவரால், Change.org-இல் ஒரு அநாமதேய மனு வந்தது. கேள்விக்குரிய பகுதி என்று குறிப்பிடப்பட்டது, உண்மையில் ஆரோவில்லின் முக்கிய நகர்ப்புற மையமான கிரவுன் என்று குறிப்பிடப்படவில்லை. 2020-இல், தற்போது தீயவராகச் சித்தரிக்கப்படும் செயலர் அவர்கள், ஆரோவில்லுக்குப் மாற்றாகப் பணியமர்த்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாஸ்டர் பிளான் எதிர்ப்பு

பிப்ரவரி 1968-இல், கேலக்ஸி திட்டம் என அழைக்கப்படும் ஸ்ரீ அன்னையால் தொடங்கப்பட்ட மாஸ்டர் பிளான் மாதிரியுடன் ஆரோவில் தொடங்கியது. 1998-ஆம் ஆண்டு, அப்போதைய நிர்வாகப் பேரவையால் முழு அளவிலான மாஸ்டர் பிளானைக் கொண்டிருப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. ஆரோவில் பவுண்டேஷன் சட்டம், மாஸ்டர் பிளான் தயாரிப்பதில் குடியிருப்பாளர்கள் பேரவையின் பரிந்துரைகளை ஏற்குமாறு நிர்வாகப் பேரவையைக் கேட்கிறது. இது 1998 முதல் செய்யப்பட்டது, மேலும் 2000-இல் நிர்வாகப் பேரவை மற்றும் 2001-இல் டிசிபிஓ (TCPO)-இன் கூடுதல் உள்ளீடுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாஸ்டர் பிளானின்படி நகரம் வளர்ச்சியடைவதை உறுதி செய்யும் பொறுப்பு, பின்னர் நிர்வாகப் பேரவையிடம் உள்ளது. இதற்காக நிர்வாகப் பேரவை ஒரு நகர மேம்பாட்டு அவையை ஒரு நிலையாணையுடன் அமைத்தது, அது மாஸ்டர் பிளான்படி நகரம் வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய அவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

மாஸ்டர் பிளான் 1969 திட்டத்தில் அமைக்கப்பட்ட வழிகளில் பின்பற்றப்பட்டது, ஆனால் மேலும் விரிவான மற்றும் தரவுகளுடன், நிதி திரட்ட உதவுவது மட்டுமல்லாமல், வரையறுக்கப்பட்ட நிலப் பயன்பாட்டு அளவுருக்களுடன் வளர்ச்சியைத் தொடங்கவும் இது பயன்படுத்தப்பட்டது. இது 2001ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஒப்புதலுக்கும் சென்றது, ஆனால் 2010ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. மாஸ்டர் பிளான் முன்னோக்கு 2025 ஒரு மூடிய பெட்டி அல்ல மாறாக முற்போக்கான திட்டம். இது 2025ஆம் ஆண்டிற்குள் நகரத்தை நிறைவு செய்வதை இலக்காகக் கொண்டிருந்தது. இது நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முறையான முற்றுகைகள் தடுத்தன. இதனால் டிடிபிகள் (DDP) இல்லை, என்டிடிஏ (NDTA) இல்லை, பலமுறை முயற்சித்தாலும் கிரவுன் எதுவும் சாத்தியமில்லை. இப்போது போலவே, அன்றும், குரல் எழுப்பிய அதே குழு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, நன்கு இணைக்கப்பட்ட மற்றும் ஊடக அறிவாற்றல், ஆரோவில்லை பணயக்கைதியாக வைத்திருந்தது.

தொடக்கத்தில் மாஸ்டர் பிளான் ‘சர்ச்சைக்குரியது’ என்று அறிவிக்கப்பட்டது, எனவே அனைவரும் வசதியாக உட்கார்ந்து எப்போதும் வாதிடலாம், மேலும் இந்த கோஷ்டி, “சரியானது என்று முடிவு செய்ததை மட்டுமே செய்யலாம்“. முன்னதாக, 1971ஆம் ஆண்டில், ஸ்ரீ அன்னை பின்வருவனவற்றை தெரிவிக்க வேண்டியிருந்தது: ஆரோவில் நிர்மாணிக்கும் கட்டத்தில் உள்ளது, எனவே, இங்கு ஒழுக்கமான பணியாளர்கள் தேவை. ஒழுக்கத்தை விரும்பாதவர்கள் அல்லது பின்பற்ற முடியாதவர்கள் தற்போது இங்கு இருக்கக்கூடாது. நல்லெண்ணம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவை ஆரோவில்வாசிகளாக இருக்க விரும்புவோருக்கு இன்றியமையாத பண்புகள் ஆகும்.

ஆரோவில் இன்னும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது, இடைவிடாத எதிர்ப்பு மற்றும் முற்றுகைகளால் மிகவும் தாமதமாகி, இப்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) இந்த தனித்துவமான மற்றும் அழகான திட்டத்தை காடாக கருத அறிவித்ததன் மூலம் தடையைப் பெற்றுள்ளது – நகரமும் பசுமையும் இணக்கமாக செயல்பட திட்டமிடப்பட்ட ஸ்ரீ அன்னையின் தொலைநோக்கு நகரத்தை திடீரென இரத்து செய்கிறது. ஆரோவில்லுக்கு இது ஒரு ஆபத்தான நேரம், அங்கு பசுமைத் தோல் போர்த்திய ஒரு சிலரின் விருப்பங்களும் ஆசைகளும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு பரிசோதனையை மூழ்கடிக்கும் அபாயத்தை இயக்குகிறது.

மாஸ்டர் பிளானுக்கு எதிராககாடுவளர்ப்பு

1999 அக்டோபரில், சமூகத்தில் மாஸ்டர் பிளான் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதால், கிரவுன் பகுதியிலும் பண்பாட்டு மண்டலத்தின் சில பகுதிகளிலும் மரம் நடும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. 1999 அக்டோபரின் ஆரோவில் நியூஸ் எண்.809-இல் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. குடியிருப்பாளர்களால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, வளர்ச்சிப்பணிகள் குழு, ஆரோவில்வாசியும் காடுவளர்ப்பு பணியில் ஈடுபட்டு வருபவருமான கிளென் பால்ட்வின்-ஐத் தொடர்பு கொண்டது. அவரது பசுமைப் பணியை அவர்கள் பாராட்டினாலும், எதிர்கால வளர்ச்சி தொடங்கும்போது மரங்கள் வெட்டப்படாமல் இருக்க, ஒதுக்கப்பட்ட பசுமையான பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நடலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மரங்கள் எதிர்காலத்தில் மரக்கட்டைகளுக்குப் பயன்படும், காடுகளை உருவாக்க அல்ல என்பது அவரது பதில். ஆனால் அது பின்பற்றப்படவில்லை. குறிப்பாக நகரப் பகுதிக்காக நன்கொடைகள் மூலம் வாங்கப்பட்ட நிலம், அனுமதியின்றி படிப்படியாக கையகப்படுத்தப்பட்டு, அதில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த குறிப்பிட்ட பகுதியான, பிளிஸ், தொழில்துறை மண்டலத்துடன் இணைக்கும் வடக்கு நகர மையத்தில் வருகிறது. இது பசுமையான பாதைகள், நீர்வழிகள், நிர்வாக மற்றும் வாழ்விடப் பகுதிகளுடன் இடைப்பட்ட பூங்காக்கள், தொழிற் பயிற்சிப் பகுதி, கிரவுன் கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இந்த நன்கு திட்டமிடப்பட்ட பகுதி, அசல் கேலக்ஸி திட்டத்தை நேர்த்தியாகப் பின்பற்றுகிறது. (படங்களைப் பார்க்கவும்) நகர மையத்தின் இந்த வடக்கு தொழிற்கூடப் பிரிவை கையகப்படுத்தி அதை காடாக மாற்றியதன் மூலம் 4 விஷயங்கள் சாதிக்கப்பட்டது: 1. யூத் சென்டர் பகுதி காடாக உள்ளது என்று காரணம் காட்டி அங்கு கிரவுன்  நீக்கப்பட்டது, இதனால் நகரம் முழுவதும் செல்லும் சுற்றோட்டத்தை அது தடுக்கிறது. 2. 2018ஆம் ஆண்டு தொழிற் பயிற்சி பட்டியலில் இருந்த முதல் திட்டத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டது. அதில் அப்போதைய நிர்வாகப் பேரவைத் தலைவர் டாக்டர் கரண்சிங் அவர்கள் கலந்துகொண்ட பிறகும், அது திட்டவட்டமாக நிறுத்தப்பட்டது. அதனால் அத்திட்டம் இரத்தானது. 3. கிரவுன் மற்றும் தொழிற்பயிற்சி பகுதியுடன் தொழில்துறை மண்டலத்தை இணைக்கும் எந்த வளர்ச்சியும் அனுமதிக்கப்படாது என்பதை ‘காடு’ உறுதி செய்யும். 4. வன நண்பர்கள் அவர்கள் விரும்பியபடி சைக்கிள் பாதைகளை உருவாக்குவார்கள், இன்றுவரை மிகச் சிலரே பயன்படுத்துவார்கள். மரங்கள் நிறைந்த பூங்காக்கள் அனுமதிக்கப்படவில்லை, பூக்கும் புதர்ச்செடிகள் அல்லது மூலிகைத் தோட்டங்கள் இல்லை, நீர்நிலைகள் இல்லை, மக்கள் நடக்க, உட்கார, புத்தகம் படிக்க அல்லது குழந்தைகள் விளையாடுவதற்கான பாதைகள் இல்லை, இவை அனைத்தும் நகர்ப்புற நகர மைய பசுமை வலையமைப்பின் ஒரு பகுதியாகும்.

விரிவான வளர்ச்சித் திட்டங்கள் (DDP) திடீரென்று கோரப்படுகின்றன. எதிர்ப்பு தெரிவிக்கும் கட்டிடக்கலைஞர்களால் டிடிபி-கள் ஏன் முன்பு ஆட்சேபிக்கப்பட்டன, அல்லது தோராயமாக மரக்கன்றுகள் நடுவதற்கும் நிலத்தை கையகப்படுத்துவதற்கும் முன்பு ‘காடு வளர்ப்பவர்களால்’ ஏற்கனவே உள்ள ஆய்வுகள் சரிபார்க்கப்படாதது ஏன் என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார். கிளென் பால்ட்வின், கிறிஸ்டோஃப் போல், ஆலன் பென்னட் (இந்த வீடியோவில் அவர் என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை https://www.youtube.com/watch?v=D4bho8AFhjs) போன்ற காடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லது டோர்ல் ஹெல்லர் (தனது ஓய்வு நேரத்தில் கரப்பான் பூச்சிகளை இடுகையிடுபவர் https://youtu.be/lFztgQ9S-uI போன்ற கட்டிடக்கலைஞர்கள் – அனைவரும் மாஸ்டர் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் உண்மையில் பல தசாப்தங்களாக கிரவுன் வளர்ச்சியைத் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு அனுமதியின்றி, கையகப்படுத்தப்பட்ட நிலம், அவர்களின் உத்தரவின் கீழ் விடாப்பிடியாக உள்ளது, அதே நேரத்தில் காடுகள் அழிந்து வருகின்றன, ஒரு தீய சர்வாதிகார செயலாளர் அவர்களால் ஆலோசிக்கப்படவில்லை, தவறான மாஸ்டர் பிளான் என்று ஊடகங்கள் முடிவில்லாக் கதைகளை புனைகின்றன.  

சிபிடபுள்யுடி (CPWD) உடன் ஆரோவில் நகர வளர்ச்சி அவை பிளிஸ் பகுதி வழியாகச் செல்லும் சைக்கிள் பாதையை சுத்தம் செய்தது. பொறியாளர்கள் தங்கள் பணியை எப்படிச் செய்ய வேண்டும் என்றால், குடியிருப்பாளர் பேரவையைக் கலந்தாலோசித்த பின்னரே அதைச் செய்ய முடியும் என்று நிர்வாக முறைப் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் விரிவுரைகளால் இது மீண்டும் தடுக்கப்பட்டது.

சுத்தப்படுத்தப்படும் பாதைகள், ஆரோவில் நகர வளர்ச்சி அவையாலும், சிபிடபுள்யுடி (CPWD)-ஆலும், மகாலக்ஷ்மி பூங்காவில் பின்பற்றப்பட்ட அகலத்திற்கு, தரையில் மூடியுள்ள மரஞ்செடிகொடிகளை மட்டுமே அகற்றப்பட்டு சரிசெய்யப்பட்டது. அதை வனக்குழு மதிக்கத் தவறிவிட்டது. மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை, அடர்ந்த புதர்கள் மட்டுமே பாதையைத் தடுக்கின்றன. வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏடிடிசி நகர்ப்புற வடிவமைப்புத் தலைவர் அனுபமா குண்டூ, ரோஷே ஆன்ஷேவுடன் பணிபுரிந்ததற்காக பொதுவாக கேலி செய்யப்படுகிறார். 2006-இல் அவருடன் நகர மைய ஆய்வை அவர் தயாரித்தார், அது ஒருபோதும் ஆலோசிக்கப்படவில்லை. அனுபமா குண்டூ, உள்ளூர் கட்டிடத் தொழில் நுட்பங்கள், கட்டிடப்பொருட்களை கொணருதல், கட்டுமானக் கொள்கைகள் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு தீவிரப் பதிலளிப்பதற்காக, மதிப்புமிக்க ஆர்ஐபிஏ (RIBA) சார்லஸ் ஜென்க்ஸ் விருது, கட்டிடக்கலைஞர்களின் சர்வதேச ஒன்றியத்தால் வழங்கப்படும் அகஸ்டே பெரெட் விருது உட்பட பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர்.

குடியிருப்பாளர்கள் பேரவை ‘எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது’ என்ற புனையப்பட்ட கட்டுக்கதைகளை முறியடிக்க வேண்டும்: 1965ஆம் ஆண்டு ஜூலை மாதம், தமது கட்டிடக்கலைஞரான ரோஷே ஆன்ஷேவுடன் தான் நகரத்திற்கான அனைத்து விவரங்களையும் முடிவு செய்வதாகவும், இவ்விஷயத்தில் சொல்லுவதற்கு வேறு யாருக்கும் எதுவும் இல்லை[1] என்றும் ஸ்ரீ அன்னை தெளிவாகத் தெரிவித்திருந்தார். பல குறுக்கீடுகள் வெளிப்படும் என்பதை உணர்ந்து மற்றொரு திட்டவட்டமான அறிக்கையில் அவர் இவ்வாறு கூறுகிறார்: ஆரோவில்: கட்டிடக்கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு: நீங்கள் திட்டத்தைப் பற்றி விவாதிக்க இங்கு இல்லை. நீங்கள் நகரத்தை உருவாக்க இங்கு வந்துள்ளீர்கள்[2]. நிலத்தை வைத்திருப்பதற்கான முடிவில்லா விவாதங்கள் மற்றும் ஆட்சேபனைகள் இந்த தாமத யுக்திகளால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்புக்கு வழிவகுத்தது, நன்கொடைகள் வீணாகின்றன, மாஸ்டர் பிளான் பகுதியில் வெளிப்புற மேம்பாட்டாளர்களிடம் (டெவலப்பர்கள்) இழந்த நிலத்தைப் பற்றி பேசக்கூடாது. இது உள்ளுணர்வான வளர்ச்சி அல்லது ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டபடி, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குடியிருப்பாளர்கள் பேரவையின் பரிந்துரைகளுடன் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. மாஸ்டர் பிளான் அடிப்படையில் நகரத்தின் மேம்பாடு என்பது நிர்வாகப் பேரவையின் பொறுப்பாகும், அதற்காக ஆரோவில் நகர வளர்ச்சி அவையை (ATDC) உருவாக்கியது. குடியிருப்பாளர்கள் பேரவை தலையிடத் தேவையில்லை.

யதேச்சாதிகாரம்

பிராந்திய களங்கள் மற்றும் முற்றுகைகள் தொடர அனுமதிக்கப்பட்டால் ஆரோவில் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. அதுபோல, சமூகத்தில் எந்த விவாதமும் இல்லாமல், அமல்படுத்தப்பட்ட என்ஜிடி (NGT) தடை உத்தரவால் அனைத்து வளர்ச்சியும் நின்றுவிட்டது. இது ஒரு வழிப்பாதை விதியாகும், இதில் யாருக்கும் நம்பிக்கையில்லை. மரங்களை வெட்டாமல், அதற்கு இடையூறாக உள்ள கட்டடங்களை அகற்ற, கிரவுன் பணியைத் தொடர அனுமதியளித்து, என்ஜிடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், வேறு எந்த திட்டமும் தற்போது தொடர முடியாமல், விலைவாசி உயர்வால் முடங்கிக் கிடக்கிறது. இதற்கிடையில், காடுவளர்ப்போர், கட்டிடக்கலைஞர்கள் குழு, மற்றும் அவர்களுடைய நண்பர்களின் இந்த பிரிவினரால், மாஸ்டர் பிளான் திட்டத்தை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழல் என்ன யதேச்சாதிகாரம்? நாம் வரலாற்றைப் பார்ப்போம்: மரங்கள் காடுகளுக்கு அல்ல வேலைப்பாட்டு மரங்களுக்காக என்று வளர்ச்சிக் குழுவுக்கு முதலில் உறுதியளிக்கப்பட்ட போதிலும், மாஸ்டர் பிளான்படி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதற்காகவே நிலம் அதிகாரபூர்வமாக வாங்கப்பட்டது. பல முயற்சிகள் செய்தும் ஏடிடிசி உடன் இணைந்து செயல்பட முடியவில்லை. உண்மையில், பொதுக்கூட்டங்களை அழைப்பதும், ஏடிடிசி பற்றி பொய் சொல்வதும், மாஸ்டர் பிளானை கேலி செய்வதும், வேறு யாரையும் பேச அனுமதிக்காததும், நிச்சயமாக அதை புறக்கணிப்பதும்தான் போக்காக இருந்து வந்துள்ளது: நாங்கள் உங்களை அங்கீகரிக்கவில்லை. இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டவை மற்றும் தற்போதைய செயலாளர் அவர்கள் வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே நடந்துள்ளன.

ஜேசிபி அதிகார வரம்பு: 1968-இல் நகரத்தின் வட்டவடிவுத் திட்டம் குறிக்கப்பட்டது. 4 மண்டலங்களில் ஒவ்வொன்றிற்கும் கிரவுனிலிருந்து நகர மையப் பகுதிக்குள் ஒரு அணுகல் பாதை இருக்கும். கிரவுனில் இருந்து வடக்கு நகர மையத்திற்குள் நுழைவதற்கான அனுமதி ஏடிடிசி-ஆல் குடியிருப்பு வாழ்விடத் திட்டமான சிட்டாடினுக்கு வழங்கப்பட்டது. இதற்கு காடு வளர்ப்போர் பின்வரும் காரணங்களைக் கூறி ஆட்சேபனை தெரிவித்தனர்: ‘வனம்’ வழியாக திட்டத்திற்கு அனுமதி இல்லை. மரங்கள் இப்போது காடாகவும் காட்டுப் பகுதியாகவும் ஆகி உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்டுமானம் முடியும் வரை மட்டுமே இப்பாதை இருக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டில், குடியிருப்பாளர்கள் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறிய ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு ஜேசிபி வெற்றிகரமான முறையில் ஒரு காடு வளர்ப்பவருடன் சென்றது, மேலும் அனைத்து அணுகலையும் தடுக்க பெரிய மற்றும் ஆழமான பள்ளம் தோண்டியது. இதுபற்றி குடியிருப்பாளர்களிடமோ அல்லது திட்ட நிர்வாகிகளிடமோ எந்தவிதமான முன் விவாதமும் நடக்கவில்லை, எந்த குடியிருப்பாளர்கள் பேரவையும் இத்தகைய உயர்நிலைச் செயலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது முழுக்க முழுக்க மிரட்டலாக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளத்தை நிரப்புவதற்கு குடியிருப்புவாசிகள் தடுக்கப்பட்டனர். அவசர உதவிக்கு கூட, அந்த வழியாக ஆம்புலன்ஸ் எதுவும் வந்திருக்க முடியாது. இறுதியாக, காடு வளர்ப்போர் நிலப் பிரபுக்கள் வழங்குவது போல், ஒரு துண்டு நிலத்தை ‘கொடுத்தனர்’, இந்த வழி தொடர்கிறது, ஆனால் மாஸ்டர் பிளான் மீது எந்த தாக்கமும் இல்லை. எதேச்சதிகாரம் பற்றிய கேள்வி, உரிமையின் சாதுவான நிரூபணத்துடன் இணைந்தது, சுதந்திரமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டது, அது பார்ப்பதற்கு மிகவும் எளிதாக வெளிப்படையாகத் தெரிகிறது. இத்தகைய ஆதிக்க வழிகளை ஏன் அப்போது எதுவும் செய்யமுடியவில்லை, செயலாளர் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் குவிந்து கிடப்பதால் இப்போது ஏன் எதுவும் செய்யமுடியவில்லை. ஆரோவில் பிணையாளியாக இருக்கும்போது நகரத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிராக, ஏன் கேள்வி கேட்கப்பட வேண்டும்.

செயலாளர்

டாக்டர் ஜெயந்தி ரவி அவர்கள் 05.07.2021 அன்று பதவியேற்றார். மூத்த அதிகாரியும் உயர் பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் ஜெயந்தி ரவி அவர்கள் அணு இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர், மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும், மின் ஆளுமையில் பிஎச்டி பட்டத்தையும் பெற்றவர். நகரப் பகுதி மற்றும் கிரீன்பெல்ட் ஆகிய இரண்டிற்கும் நிலம் வாங்குவதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உந்துதலை அவர் தொடங்கினார்; உறக்கநிலையில் இருந்த விரிவான வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்த வடிவமைத்தார், பல தசாப்தங்களில் முதல் முறையாக குடியிருப்பாளர்களுக்கு கிரவுனைத் திறந்து, கிரவுன்-நடைப்பயணத்தைத் தொடங்கி, கட்டிடக்கலைஞர்கள், இளைஞர்கள் மற்றும் பிறருடன் 50 சுற்றுகள் வரை விவாதம் நடத்தினார், முட்டுக்கட்டையை கடந்து நகரத்தை கற்பனை செய்து வேலையில் இறங்க உதவினார்.  இணையாக, அவர் தொழில்நுட்ப நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உள்கட்டமைப்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை ஈடுபடுத்தினார். மற்ற குடியிருப்பாளர்கள் இரண்டு முறை நிர்வாகப் பேரவையை அணுகி, கிரவுனின் வேலையைத் தொடர்ந்து செய்யுமாறும், அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்குமாறும் கோரினர்.

டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஜேசிபிகளின் நுழைவு குறித்து அடிக்கடி பேசப்பட்டது. அதே நேரத்தில் குழந்தைகளை ஜேசிபியில் ஏற்றிய பெற்றோர்களின் வன்முறை ஒதுக்கித் தள்ளப்பட்டது. பொது இடங்களில், பள்ளிகள் அல்லது பணியிடங்களில் மக்களையும் குழந்தைகளையும் ஒதுக்கி வைக்கும் உளவியல் வன்முறை, பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கூடிய கோரமான வீடியோக்கள், டாக்டர் ரவி அவர்களுக்கு எதிரான தவறான நடத்தை, மன்னிப்பு கேட்காமல் பொதுக் கூட்டங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது அனைத்தும் ‘இயல்பாக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2005 முதல் நிலுவையில் உள்ள குடியிருப்பாளர்களின் பதிவேட்டை புதுப்பிக்கும் இயக்கம் மேலும் எதிர்ப்புகளைக் கொண்டு வந்தது. உலகத்தினர், அரசாங்கம் ஆகியோரின் பார்வையில் அவரை அவமானப்படுத்தவும் பொல்லாதவராகவும், அச்சுறுத்துபவராகவும் சித்தரித்துக் காட்டுவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்கின்றன. ஆரோவில்லில் அனைவரும் அமைதி, அன்பு, ஒற்றுமையுடன் இருப்பதாகவும், செயலாளர் அவர்களின் திடீர் வருகையால்,  அனைவரின் யோக சொர்க்கத்தையும் அழித்து விட்டது போலவும் நல்ல கதை சொல்லப்படுகிறது. இத்தகைய சுயநல உத்திகள் ஆரோவில்லுக்கு மட்டுமே தீங்கு விளைவித்து, அனைத்து நல்லெண்ணத்தையும் வீணடித்துவிட்டன.

வேகம். போலி. பிரபலம்

நாம் மேலே பார்த்தது போல், மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்படும்போது மரம் நடும் இயக்கம் தொடங்கியது. அதே நேரத்தில், இந்த பிரிவானது எதிர்கால நகரம் – பூமிக்குத் தேவையான நகரம் என்பதிலிருந்து, நிலையான வளர்ச்சிக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட திட்டமாக, பசுமை சுற்றுலாவைக் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் கிராம மாதிரியாக மாற்ற முடிவு செய்தது. எங்களுக்கு 50,000 பேர் தேவையில்லை, 5000 பேர் போதும் என்று விரைவில் அறிவிக்கப்பட்டது. அதையெல்லாம் இந்தக் கோஷ்டிதான் முடிவு செய்தது. இந்நகரத் திட்டம் எப்பொழுதும் சூரிய சக்தி, மழைநீர்ச் சேகரிப்பு, பொருத்தமான கட்டுமானப் பொருட்கள், புதிய தொழில்நுட்பம், பாதசாரிகளுக்கு இணக்கமாக இருத்தல், குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது – இவை அனைத்தும் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. நகரத்தை விட 3 மடங்கு பெரிய பசுமை வளையப்பகுதியைக் கொண்டிருப்பது மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாகும், இது நகரத்திற்கும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். இன்றைய விகிதாச்சாரத்தில், பண்ணைகளை விட காடுகளே அதிகம். இந்த இரண்டு பிரிவுகளிலும் பெரும் நிலப்பரப்பு மிகக் குறைந்த நபர்களால் நிர்வகிக்கப்படுகிறது. நகரத்தை நிர்மாணிக்காமல் எல்லா நிலமும் நமக்கே வேண்டும் என்பது இன்றைய உலகில் நிலைக்க முடியாதது மற்றும் சுயநலமானது. ஆரோவில் ஒரு மாதிரி நகரமாக இருக்க வேண்டும், மாதிரி காடு அல்ல. ஆரோவில் டுடே நேர்காணலில் ரோஷே ஆன்ஷே கூறியது போல்: ஒருவர் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் ஒருவருக்கு அருகிலுள்ள அண்டை வீட்டாரிடம் இருந்து கிலோமீட்டர் தொலைவில் வீடு கட்ட போதுமான நிலம் எப்போதும் இருக்காது, நிச்சயமாக ஆரோவில்லில் இல்லை… ஒருவர் ஒரு புதிய கண்டுபிடிப்பு முறையில் அடியெடுத்து வைக்க வேண்டும், நகர்ப்புறம் சார்ந்த ஒன்று…… சமகால வாழ்க்கை, மனித உறவுகள், தொழில்நுட்பம், இயற்கையின் மீதான மரியாதை, இது சாத்தியம் என்பதை உலகுக்குக் காட்ட மிகவும் ஆக்கப்பூர்வமான சூழலில் அடங்கும். தற்போதைக்கு நாம் வெறுமனே ஒரு வெற்று, வசதியான, ஆக்கப்பூர்வமற்ற அமைப்புமுறையை நிலைநிறுத்துவதைத் தொடர்கிறோம், அது எதிர்காலத்திற்கும் அல்லது ஸ்ரீ அன்னையின் கனவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது உள்ளிருந்து ஒரு புரட்சி என்று ஒருவர் கற்பனை செய்து காண வேண்டும்.

ஊடகங்களில் ஆரோவில் மரங்கள், பல்லுயிர் பன்முகத்தன்மை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது, இது பெரும்பாலும் அனுமதியின்றி அவர்கள் காணக்கூடிய அனைத்தையும் நிலங்களையும் மட்டுமே வேகமாக படம்பிடித்துக் காண்பிக்கின்றன. இது ஆரோவில் ஒரு காடு மற்றும் சுற்றுச்சூழல் கிராமம், யாரிடமும் எந்த உதவியின்றி  இக்கோளை அது காப்பாற்றுகிறது என்ற போலியான கதைக்கு வழிவகுத்தது, இந்த விவரிப்பு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் முழுவதும் பிரபலமானது, ஆரோவில்லின் அசல் இலட்சியத்தை படிப்படியாக மாற்றுகிறது. மாஸ்டர் பிளான் மிகவும் பசுமையான நகரம் மற்றும் அதன் அளவை 3 மடங்கு பசுமை வளையப் பகுதியைக் கொண்டுள்ளது. நகரம் மற்றும் பசுமை ஆகிய இரண்டும் இணைந்திருக்க வேண்டும், இரண்டையும் விலக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த நகரம் 5 முதல் 10 ஆண்டுகளில் கட்டப்பட வேண்டும். ஆரோவில் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் காத்திருக்கிறது. கட்டாயப்படுத்தப்பட்ட தேக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய தொடக்கத்திற்கு முன்னேறி, உண்மையாக, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

அனு மஜும்தார் 1979ஆம் ஆண்டு முதல் ஆரோவில் குடியிருப்பாளராக வசித்து வருகிறார், மேலும் ஆரோவில்: எதிர்காலத்திற்கான நகரம் (A City for the Future) என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.

  1. ஆரோவில் பற்றி ஸ்ரீ அன்னை கூறியவை, ஆரோவில் ஆவணக்காப்பகம், 24 ஜூலை, 1965
  2. ஆரோவில் ஆவணக்காப்பகம்
  3. கூடுதல் இணைப்பு: https://www.youtube.com/watch?v=4XfRwvJXIdw

Read in: English or French

The Museum of Modern Art

June 13, 2022

To Whom It May Concern:
Roger Anger’s Auroville Model

Architect Roger Anger’s model for the experimental township of Auroville is a unique architectural
artifact of both high artistic merit and historical significance. It is an extremely elaborate, expressive
object that clearly communicates Auroville’s bold urban form and its relationship with the landscape,
as imagined by Anger and the Mother, Mirra Alfassa – a quality that is particularly difficult to express
at the level of the city. While architectural models are often thought of as mere tools for representing
spatial ideas, they are also significant tools for architects themselves to visualize, evaluate, and
refine their ideas in physical form. Anger’s model for the township of Auroville, in particular, helped
not only visualize but also determine the widely celebrated “galaxy” plan of this new experimental
society near Pondicherry. As such, it is a stunning artifact representing and embodying an equally
stunning urban and societal vision.


Thanks to the generosity and the unwavering support of the Auroville Town Development Council
(ATDC), the Auroville model is currently on view at The Museum of Modern Art (MoMA) as part of the
exhibition The Project of Independence: Architectures of Decolonization in South Asia, 1947–1985
(February 20-July 2, 2022). This exhibition is the first of its kind to showcase the Subcontinent’s
extraordinary architectural production in the post-Independence period in a transnational way. The
Auroville model constitutes one of the anchor pieces of the exhibition’s opening section, “New
Cities,” which explores the design and construction of new and innovative urban visions for life in
South Asia after Independence. Most importantly, this unique artifact is the only architectural model
presented in this entire section.


MoMA performs conservation work for objects it deems to be of highest historical and artistic value –
an honor usually reserved for objects in MoMA’s permanent collection. The Auroville model was a
rare instance in which an object on loan was assessed as worthy of reconditioning treatment from
our world-class team of conservators. In order to present the model in the best possible light to our
audiences, and with approval of the ATDC, our colleagues in the Department of Sculpture
Conservation performed 40 hours of treatment on the model – removing dust and impurities that had
accumulated over the decades, repairing the perimeter of the base so as to aesthetically present a
uniformly painted edge, and repairing a slightly disfigured building in the center of the model
where the pressure of the deforming and scratched acrylic that originally covered the model had
resulted in damage over time. Upon the completion of this restoration project, the Auroville model
was mounted in a dedicated pedestal in MoMA’s galleries and covered with a custom-fabricated
bonnet so that the power of the Mother’s and Anger’s urban vision for Auroville could be
communicated to exhibition visitors with the utmost immediacy.


The model has been displayed to resounding success and is one of the main attractions of the
exhibition. Many visitors – professionals and general audience members alike – have commented on
the extraordinary architectural merits and beauty of this object. For these reasons, the Department
of Architecture and Design earnestly hopes to include the model in MoMA’s collection, which will
allow curators to exhibit it in a number of different contexts and changing displays going forward.
I am pleased to attach to this letter a number of photographs documenting the presence of Roger
Anger’s model in the current exhibition.

Sincerely,
Martino Stierli


The Philip Johnson Chief Curator of Architecture and Design
New York, NY 10019

Copyright should be left out of Auroville

The Auroville Charter

  1. Auroville belongs to nobody in particular. Auroville belongs to humanity as a whole. But, to live in Auroville, one must be a willing servitor of the Divine Consciousness.
  2. Auroville will be the place of an unending education, of constant progress, and a youth that never ages.
  3. Auroville wants to be the bridge between the past and the future. Taking advantage of all discoveries from without and from within, Auroville will boldly spring towards future realisations.
  4. Auroville will be a site of material and spiritual researches for a living embodiment of an actual human unity.

If the above is what we abide by as committed Aurovilians, I think we need to seriously revisit Auroville’s ‘copyright’ doctrine. If Auroville belongs to nobody in particular, how can the ideas, insights, and innovations that come out of Auroville be with strings attached?

We need to declare outright openly that the outcomes, outputs, and outflows borne out of Auroville are selfless offerings towards humanity, and that we do not require royalties, commission, and dividends for our love. 

Ethically, it also makes sense, as one cannot claim total ownership rights to anything in Auroville. Every effort in Auroville is built on previous efforts of Aurovilians, countless hours of volunteers, goodwill of the locals, funding of the donors, support of the governments, etc. 

Auroville should adhere to the copyleft principle. Copyleft is the legal technique of granting certain freedoms over copies of copyrighted works with the requirement that the same rights be preserved in derivative works. 

The ones who do not want to adhere to this collective commitment should voluntarily move out of Auroville, to perpetually profit from ‘their’ idea, insight, or innovation. 

Absurdities in Auroville RADs

RAD-kalabhumi-crowd

I’m no expert on political democracies, electoral methodologies, or psephology. I am merely pointing out as a layman, the glaring gaps in the ongoing RAD. I understand that we need some systems to organise ourselves, and the voting system is a stepping stone. I am only trying to point out the blatant absurdities inherent in the ongoing process. The ongoing RAD is flawed at multiple levels and I’ve thus publicly posted my statement, announcing my abstination.

Continue reading